சதுர்த்தியை முன்னிட்டு உப்பூர் விநாயகருக்கு திருக்கல்யாணம் - ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரா் ஆலயம்oddusuddansivankovil ஒட்டுசுட்டான் தாந்தோன்றீஸ்வரம்
Headlines News :
Home » » சதுர்த்தியை முன்னிட்டு உப்பூர் விநாயகருக்கு திருக்கல்யாணம்

சதுர்த்தியை முன்னிட்டு உப்பூர் விநாயகருக்கு திருக்கல்யாணம்

Written By Admin on Tuesday 18 September 2012 | 19:46





ராமநாதபுரம்: உப்பூர் வெயிலுகந்த விநாயகருக்கு சித்தி, புத்தியுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது.ராமநாதபுரம் மாவட் டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இவ்விநாயகர் ராமபிரானால் பூஜிக்கப்பட்டது. தமிழகத்திலேயே இங்குதான் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இக்கோயிலின் சதுர்த்தி விழா, கடந்த 9ம் தேதி அனுக்ஞை பூஜையுடன் தொடங்கி,  10ம் தேதி கொடியேற்றம் நடந்தது. அதைத்தொடர்ந்து தினமும் விநாயகர் கேடகம், சிம்ம வாகனம், மயில் வாகனம், யானை வாகனம், ரிஷப வாகனம், காமதேனு,

 குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். முக்கிய திருவிழாவான திருக்கல்யாணம் நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு நடைபெற் றது. இதில் விநாயகருக்கு, சித்தி, புத்தியுடன் திருக்கல்யாணம் நடந்தது. கோயில் குருக்கள் ரவிக்குமார், ஆதிரெத்தினம் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

ஒட்டுசுட்டான்வேகாவனப் பரம்பொருளை நோக்கிய கோயில் பாட ல்

சிவ புராணம் 1 சிவ புராணம் 2 OM NAMA SHIVAYA
 
தவராசா.கேசவன் நெடுந்தீவு யாழ்ப்பாணம்