திருநீறு ( விபூதி ) தத்துவம் - ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரா் ஆலயம்oddusuddansivankovil ஒட்டுசுட்டான் தாந்தோன்றீஸ்வரம்
Headlines News :
Home » » திருநீறு ( விபூதி ) தத்துவம்

திருநீறு ( விபூதி ) தத்துவம்

Written By Admin on Friday 14 September 2012 | 04:15


பதி - பசு - பாசம் என்கின்ற சைவ தத்துவத்தில்
பதி என்பது இறைவனையும்
பசு என்பது ஜீவர்களான மனிதர்களையும்
பாசம் என்பது மனிதர்கள் உலகின் மீது வைத்துள்ள பற்றுக்களையும்
( பாசம் என்றால் கயிறு என்று பொருள் படும்)
பசு ஆகிய மனிதர்கள் பாசம் எனப்படும் உலகியல் பற்றுகளில்
கட்டுண்டு பிறவி துன்பத்தில் அவதி பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
சாதாரணமாக் திருநீறு எனப்படும் விபூதி எப்படி தயாரிக்கிறார்கள் என்றால்
பசு மாட்டின் சாணத்தை வரட்டியாக்கி பின்னர் அதை எரித்து
அதன் சாம்பலை எடுத்து அதனுடன் வாசனை திரவியங்களை
சேர்த்து இறைவனுக்கு படைத்து பின்னர் அதை பக்தர்களுக்கு விநியோகிப்பார்கள்.
இதில் உள்ள தத்துவம்
பசு என்பது ஜீவர்களாகிய மனிதர்கள்
பசுவின் சாணம் (மலம்) என்பது மனிதர்களை பற்றிய மலமாகிய
ஆணவம் கன்மம் மாயை மற்றும்
மனம், புத்தி, சித்தம், அகங்காரம்
ஆகியவற்றை ஞானம் என்னும் தீயினால் எரித்தால்
அசுத்தமான மலம் எரிக்கப்பட்டு சுத்தமான சாம்பலாக மாறுவது போல்
நம்மி பற்றிய அசுத்தங்கள் நீங்கி சுத்த நிலையினை அடையலாம்.
இது வரை பதி ஆகிய இறைவனை நினைக்க விடாமல் தடுத்த
மலம் ஆகிய ஆணவம் கன்மம் மாயை மற்றும்
மனம், புத்தி, சித்தம், அகங்காரம் நீங்கி
இறைவனே நம்மை எடுத்து ஆட்கொள்வார்.
ஆகவே நாமும் நம்மிடம் இருக்கும் அசுத்த மாயை நீங்கி
இறை நிலையை அடைய முயற்சிப்போம்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

ஒட்டுசுட்டான்வேகாவனப் பரம்பொருளை நோக்கிய கோயில் பாட ல்

சிவ புராணம் 1 சிவ புராணம் 2 OM NAMA SHIVAYA
 
தவராசா.கேசவன் நெடுந்தீவு யாழ்ப்பாணம்